×

காலாவதி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு

சாத்தூர், நவ.29: இந்திய அஞ்சல் துறை சார்பில் குறைந்த தவணை மற்றும் அதிக ஊக்கத்தொகையுடன் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு ஆகிய ஆயுள் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த காப்பீடு திட்டத்தில் சேர்ந்த பாலிசிதாரர்கள் சிலர் தொடர்ச்சியாக தவணைத் தொகையை செலுத்தாததால் அவர்களது பாலிசிகள் காலாவதியாகின்றன. அவ்வாறு கடைசி தவணை செலுத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து காலாவதியான பாலிசிகளை வருகிற 31.12.2019 க்குள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து, பாலிசியை புதுப்பித்து கொள்ளலாம் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  ஸ்ரீராமன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்