×

வருசநாடு அருகே கனமழையால் வீடு இடிந்தது

வருசநாடு, நவ.29: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கனமழையால் கூலி தொழிலாளி வீடு இடிந்தது. வருசநாடு அருகே சிங்காரஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி ஈஸ்வரி(41). சில ஆண்டுகளுக்கு இளங்கோவன் இறந்து விட்டார். இதனால் ஈஸ்வரி கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வருசநாடுபகுதியில் பெய்த கனமழையில் ஈஸ்வரி வீடு இடிந்து விழுந்தது. தகவலறிந்த மயிலாடும்பாறை கிராம அலுவலர் சசிகுமார், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், சிங்கராஜபுரம் ஊராட்சி செயலர் ராமசாமி ஆகியோர் இடிந்த வீட்டை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினர். வீடிழந்த ஈஸ்வரி கூறுகையில், எனது கணவர் இளங்கோவன் முருக்கோடை ஊராட்சியில் கிளர்க்காக பணியாற்றிய போது நெஞ்சுவலியால் இறந்து விட்டார். இதனால் எங்கள் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் வீடு இடிந்து பெரும் இழப்பை சந்தித்துள்ளோம். எனவே, தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : house ,Varusanad ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி