க.பரமத்தி, நவ. 29: சின்னதாராபுரம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் இறந்தார்.சின்னதாராபுரம் அருகே சின்ன திருமங்கலத்தை சேர்ந்தவர் பழனிவேல் (70). வீட்டில் இருந்து சொந்த வேலையாக சின்னதாராபுரம் சென்று வீட்டு வீடு நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். சின்னதிருமங்கலம் பிரிவு அருகே மொபட் மீது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.இதில் படுகாயமடைந்த பழனிவேலுவை பள்ளபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.