×

தோகைமலை அருகே பள்ளி சென்ற மாணவி மாயம்

தோகைமலை, நவ. 29: கரூர் மாவட்டம் தோகைமலை காவல்சரகம் நல்லூர் ஊராட்சி நல்லூர் மேற்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் என்பவரது 15 வயது மகள் திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 22ம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளி சென்ற மாணவி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடி பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் தர்மராஜ் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags : school ,Dohakaimalai ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...