×

அரசு சிலை வைக்க வேண்டும் தரகம்பட்டி ஊராளி கவுண்டர்கள் சங்க பொதுக்குழுவில் வலியுறுத்தல்

கடவூர், நவ. 29: சுதந்திர போராட்ட தியாகி பொன்னம்பல கவுண்டருக்கு அரசு சிலை வைக்க வேண்டும் என்று தரகம்பட்டி ஊராளி கவுண்டர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழ்நாடு ஊராளி கவுண்டர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தரகம்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காமராஜ், பொருளாளர் ராமசாமி, சக்தி மஹால் சரவணன், புண்ணியராசு, தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி செயலாளர் மணிவேல் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் கணேசன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி பொன்னம்பல கவுண்டருக்கு அரசு சார்பில் சிலை வைத்து விழா எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மேலவெளியூர் ரெங்கசாமி, புரவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பூபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Government ,Tarakampatti Ural Counters Association General Committee ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...