×

குடியாத்தம், வாணியம்பாடி புதிய வருவாய் கோட்டங்களுக்கு ஆர்டிஓக்கள் உட்பட 5 பேர் நியமனம் தமிழக அரசு உத்தரவு

வேலூர், நவ.29: குடியாத்தம், வாணியம்பாடி புதிய வருவாய் கோட்டங்களுக்கு புதிதாக ஆர்டிஓக்கள் உட்பட 5 பேரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 2 மாவட்டங்களுக்கும் ஆர்டிஓக்கள், துணை ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி திருப்பூரில் தமிழ்நாடு மாநில வாணிபக்கிடங்கு மேலாளராக பணியாற்றிய விஸ்வநாதன் திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை துணை ஆட்சியராகவும், கோவை வடக்கு பகுதி தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிபக்கிடங்கு மேலாளர் சந்திரசேகரன் ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியராகவும், கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் குடியாத்தம் ஆர்டிஓவாகவும் நியமிக்கப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார், வாணியம்பாடி ஆர்டிஓவாகவும், திருவண்ணாமலை சமூக பாதுகாப்பு தணித்துணை ஆட்சியர் வில்சன் ராஜசேகர் திருப்பத்தூர் கலெக்டரின் ேநர்முக உதவியாளராக(பொது) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் ஒருசில நாட்களில் பொறுப்பு ஏற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,government ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...