×

திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்க்காணல்

ஈரோடு, நவ.29:உள்ளாட்தி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்க்காணல் துவங்குகிறது. இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் செய்தவர்களுக்கு ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.அதன்படி, இன்று (29ம் தேதி) காலை 9 மணிக்கு மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கும், 12 மணிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கும், மாலை 3 மணிக்கு கொடுமுடி ஒன்றியத்திற்கும், 30ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு ஒன்றியத்திற்கும், காலை 10.30 மணிக்கு ஊத்துக்குளி ஒன்றியத்திற்கும், 12 மணிக்கு குன்னத்தூர் ஒன்றியத்திற்கும், மாலை 3 மணிக்கு பெருந்துறை ஒன்றியத்திற்கும் நேர்க்காணல் நடக்கிறது.

டிச.1ம் தேதி காலை 9 மணிக்கு சூரியம்பாளையம் பகுதிக்கும், 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் பகுதிக்கும், 11 மணிக்கு பெரியசேமூர் பகுதிக்கும், 12 மணிக்கு கோட்டை பகுதிக்கும், 3 மணிக்கு சூரம்பட்டி பகுதிக்கும், 4 மணிக்கு பெரியார்நகர் பகுதிக்கும், 5 மணிக்கு கொல்லம்பாளையம் பகுதிக்கும், 6 மணிக்கு கருங்கல்பாளையம் பகுதிக்கும் நேர்க்காணல் நடைபெற உள்ளது. இந்த நேர்க்காணலுக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, மாநகர வார்டு கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், நேர்க்காணலுக்கு வரும்போது விருப்பமனு செய்தபோது பெறப்பட்ட ரசீதினை தவறாமல் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags : petitioners ,DMK ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு