நாகை, நவ.29: நாகை நகராட்சி அலுவலகம் முன் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்டிபிஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனி முன்னிலை வகித்தார். நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அப்புறப்படுத்தவேண்டும். தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து அதில் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அள்ளவேண்டும்.
நாகை, நாகூர் போன்ற முக்கிய பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனே சீரமைக்க வேண்டும் என்றும், இதனை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.