×

குடிமக்கள் நுகர்வோர் மன்றம்

கூடலூர், நவ.29: கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்  சார்பில் கூடலூர் தேவர்சோலை அரசு  மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனிமெட்டில்டா தலைமை தாங்கினார். ஆசிரியர் கபூர் வரவேற்றார். கூடலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், நெலாகோட்டை  பகுதிப் பொறுப்பாளர் ஜீவரத்னம் ஆகியோர் மாணவர்களின் உடல் நலன் மற்றும்  நோயற்ற வாழ்வு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.தொடர்ந்து டெங்கு  காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரியர் பிரபு நன்றி  கூறினார். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Citizens Consumer Forum ,
× RELATED செட்டிகுளம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி