×

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது

திருப்பூர்,நவ.29:திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர், அண்ணாநகர், கூத்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இது குறித்து திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில் போலீசார் கூத்தம்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (31) என்பவரை விசாரித்தனர். அவர் மீது திருப்பூர்,தாராபுரம்,திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம், மத்திய, ஊரக காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள்  இருப்பது தெரியவந்தது, இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம், கணினி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : arrest ,plaintiff ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...