×

காரின் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் திருட்டு

பொங்கலூர்,நவ.29: பல்லடத்தில் சாலையோரம் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளேயிருந்த ரூ.5 லட்சம் திருடப்பட்டிருந்தது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி கிளை உள்ளது. இதன் அருகே, நேற்றுமுன்தினம் பல்லடம் குங்குமம்பாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலதிபர் கார்த்திகேயன் (46) என்பவர் தனக்கு சொந்தமான காரை நிறுத்திவிட்டு காரின் கதவுகளை பூட்டி கொண்டு அருகில் உள்ள  வங்கி கிளைக்கு சென்றார். அங்கு தனது வேலையை முடித்து கொண்டு காருக்கு திரும்பியுள்ளார்.அப்போது காரின் இடதுபுற ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயமானது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வாகனத்தை ஆய்வு செய்து, அருகிலுள்ள பலரிடமும் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் தனியார் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ