×

நடிகை காயத்ரி ரகுராம் மீது உடுமலை போலீசில் புகார்

உடுமலை, நவ. 29:திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், நடிகை காயத்ரி ரகுராம் மீது உடுமலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தொல்.திருமாவளவன் எம்பி., மீது சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட செயலாளர் ஜல்லிபட்டி முருகன் தலைமையில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன்குமார், அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார், மடத்துக்குளம் தொகுதி செயலாளர் ஈஸ்வரன், உடுமலை தொகதி செயலாளர் முத்துசாமி, உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாகூர் கனி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, உடுமலை ஒன்றிய செயலாளர் திருமூர்த்திஆகியோர் சென்று புகார் அளித்தனர்.

Tags : Gayatri Raghuram ,
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...