சேலம், நவ.28:சேலம் பெரிய சீரகாபாடியில் உள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் பெங்களூரு புல்லர்டான் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மும்பை தேவ் லோகா கல்வி அறக்கட்டளை சார்பில் நிதி நிறுவன திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. துவக்க விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புல்லர்டான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் சதீஷ் வெங்கடா, மண்டல மேலாளர் மனோகரன், ராஜசேகரன், மதுசூதனன் மற்றும் தேவ் லோகா அறக்கட்டளை நிர்வாகிகள் ஐஸ்வர் அகஸ்தி, சக்தி சர்மா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் துணை முதல்வர் சரவணன் மற்றும் டீன் ஓ.சரவணன் வாழ்த்தி பேசினார்.