×

கடமலை மயிலையில் குடிமகன்கள் தொல்லை

வருசநாடு, நவ.28: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மதுபான பாட்டில்களை தரைகளில் உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் சாலையோரம், பாலங்கள், ஓடைகள், வைகைஆறு, விவசாயநிலங்கள் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

பின்னர் காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டுச் செல்கின்றனர். எனவே பொது இடங்களில் நடைபெறும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடமலை மயிலை ஒன்றிய காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,Kadamalai ,
× RELATED கடமலை – மயிலை ஒன்றியத்தில் விரைவில் அவரைக்காய் விலை உயரும்