×

அதிவேக டூவீலர்களால் விபத்து அதிகரிப்பு போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த கோரிக்கை

பரமக்குடி, நவ. 28: குடிபோதையில் டூவீலரை அதிவேகத்தில் ஒட்டுவதால், விபத்துக்கள் அதிகரிக்கிறது. விபத்தை தடுக்க ரோந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில், குற்ற சம்பவங்கள் தடுக்க மாவட்ட எல்லை வரை இரவு, பகல், என் ஹைவே போலீசார் ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கென அனைத்து வசதிகளையும் உடைய தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ஸ்கேன் செய்து, வேகத்தை குறைக்க டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதுடன் அபராதமும் விதித்ததால், ஓரளவிற்கு விபத்துகளை தடுக்க முடிந்தது.இதனால் திருடர்களின் நடமாட்டமும் ஓரளவு குறைந்து. இரவில் தைரியமாக மக்கள் சென்று வந்தனர். சிறப்பாக செயல்பட்டு வந்த ரோந்து போலீசாரின் செயல்பாடுகள் தற்போது குறைந்து வருகிறது. காரணம், அப்போது வழங்கப்பட்ட ஹைவே வாகனங்களில் உள்ள நவீன கருவிகள் பழுதாகி செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து உட்பட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தப்பி செல்லும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர். தற்போது போலீசார் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இந்தநிலையில் கோயில் விழா, கட்சி மாநாடு, கலவரம், இயற்கை பேரிடர் போன்றவற்றுக்கு ஸ்டேஷனில் உள்ள போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்புகின்றனர். இதனால் குறைந்த போலீசார் மட்டுமே இருகின்றனர். ஏதாவது பிரச்னை, அவசர தேவை என பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சம்பவ இடத்திற்கு வர குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால் உடனுக்குடன் சென்று சம்பவங்களை தடுக்க முடியவில்லை.
இதனால் பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பகல் நேரங்களில் திருட்டு, வழிப்பறி  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தைரியமாக வெளியில் நடமாட முடியாதநிலை உள்ளது. தற்போது போலீசார் இரவு ரோந்து வருகிறார்களா என்பது தெரியவில்லை. போலீசாரின் கண்காணிப்பு பணி குறைவால், திருட்டு கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது, கேஸ் ஏஜென்சி, மின்சார வாரியம், நகராட்சி அலுவலகங்களிலிருந்து வருவதாக செல்லி வீட்டிற்குள் சென்று மயக்க மருந்து கொடுத்து எளிதாக திருடிவருகின்றனர். வாகனங்கள் அதிகரித்துள்ளதால், விபத்துகளும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் குடிபோதை, அதிகவேகம், லைசென்ஸ் இல்லாதவர்கள் வேகமாக செல்வதால், விபத்து ஏற்பட்டுவருகிறது. தற்போது என்ன நடந்தாலும் கேட்பதற்கு போலிசார் இல்லை என நினைக்கும் குற்றவாளிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரும், போலீசார் சிறப்பாக செயல்பட எஸ்.பி.,யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accident increase ,towers ,
× RELATED நீலகிரியில் இயற்கையை ரசிக்க...