×

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்

திண்டுக்கல், நவ. 28: திண்டுக்கல் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலக வளாகத்தில், கோட்டாட்சியர் தலைமையில் நாளை (நவ.29) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திண்டுக்கல் கிழக்கு- மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து, பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்