பாவூர்சத்திரம், நவ. 28: மடத்தூர் டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் நளினி ஆலோசனையின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர்கள் பாவூர்சத்திரம் டாக்டர் ராஜ்குமார், கீழப்பாவூர் ஒன்றியத்தை சேர்ந்த டாக்டர்கள் தேவி கற்பூரநாயகி, ஹரிகர சுப்பிரமணியன், அருண், ஆனந்தராஜ், பாரதி கண்ணம்மா, கீர்த்திகா மற்றும் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், அன்பழகன், பாலசுப்பிரமணியன், அதிமுக நிர்வாகிகள் ரமேஷ், அமல்ராஜ், ஐவராஜா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.