×

எஸ்டிபிஐ சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நவ.30க்குள் விருப்ப மனு அளிக்கலாம்

ஈரோடு, நவ.27: சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்டிபிஐ) சார்பில் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட துணை தலைவர் குறிஞ்சி பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முகமது லுக்மானுல்ஹக்கீம் கலந்து கொண்டு பேசினார். உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் வெற்றி வாய்ப்புள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி வார்டுகளில் போட்டியிட வேண்டும். இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை மாவட்ட நிர்வாகிகளிடம் அளிக்க  வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாபர் மசூதி வழக்கில் நீதி கோரி டிசம்பர் 6ம் தேதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் சாவிற்கு வௌிப்படையான விசாரணை நடத்த வேண்டும். ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனஙக்ளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் புளியம்பட்டி சுலைமான், செயற்குழு உறுப்பினர்கள் ஆட்டோ அப்துல்ரகுமான், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் கேபில்சபீர், பவானி தொகுதி செயலாளர் அபூபக்கர் சித்தீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : SDBI ,
× RELATED விருதுநகரில் விஜயகாந்த் மகன்...