×

லால்குடியில் வாகன ஓட்டிகள் திணறல் தொட்டியம் அருகே கண்டக்டர் வீட்டில் புகுந்து நகை திருட்டு

தொட்டியம், நவ.28: தொட்டியம் அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கண்டக்டர் வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தொட்டியம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் தா.பேட்டை அருகே ஆராய்ச்சி கிராமத்தை சேர்ந்த சபாபதி(24), முசிறி செந்தில்(30), தொட்டியம் கிருஷ்ணமூர்த்தி(44), நம்பி ராஜ்(38) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் தா.பேட்டை பகுதியில் இவர்கள் இரண்டு பைக் திருடியதும் தொட்டியம் அருகே உள்ள திருஈங்கோய்மலையில் ஒரு பைக் திருடியதும் தெரியவந்தது. மேலும் கிருஷ்ணமூர்த்தி, நம்பிராஜா ஆகிய இருவரும் பாப்பாபட்டி கிராமத்தில் கண்டக்டர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமார் 24 கிராம் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்களிடம் இருந்து 3 பைக், 24 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரை கைது செய்தனர்.

Tags : Motorists ,Lalgudi ,Thottiyam ,house ,
× RELATED லால்குடி அருகே மீன் பிடிப்பதில்...