×

விவசாயிகள் ஏமாற்றம் திருச்சியில் ஒரே நாளில் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு வயது முதிர்வை குறிவைத்து வாலிபர்கள் கைவரிசை

திருச்சி, நவ. 27: திருச்சியில் நேற்று ஒரே நாளில் பட்டப்பகலில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. வயது முதிர்வை குறி வைத்து வாலிபர்கள் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ரங்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி கமலா(65). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கடைக்காரரிடம் பாக்கு கேட்டார். கடைக்காரர் பாக்கு எடுக்க திரும்பியபோது அருகில் நின்றிருந்த கமலா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பியோடினான். இது குறித்த புகாரின் பேரில் ரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருச்சி பாலக்கரை உடையான்தோட்டத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் மனைவி அம்சவள்ளி (50). இவர் நேற்று பாலக்கரை வேர்ஹவுஸ் பாலத்தில் அடிப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இவர் கழுத்தில் இருந்த 5 கிராம் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி திருவானைக்காவலை சேர்ந்தவர் கீதா(60). இவர் நேற்று கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பஸ் ஏறுவதற்காக ரயில்வே குடியிருப்பு பகுதியில் நடந்து வந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் கீதா கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சியில் ஒரே நாளில் பட்டப்பகலில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் வயது முதிர்ந்த பெண்களை குறி வைத்து வாலிபர்கள் கைவரிசை காட்டி வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiruchirapalli ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் 17 வயது...