×

கரூர் நகரபகுதியில் ஒரு வழிப்பாதை திட்டத்தை வாகன ஓட்டிகள் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், நவ. 28: கரூர் நகரப்பகுதிகளில் ஒரு வழிப்பாதை திட்டத்தை வாகன ஓட்டிகள் பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி சாலை, செங்குந்தபுரம், திண்ணப்பா கார்னர், 80 அடி ரோடு, எம்ஜி ரோடு போன்ற பகுதிகளில் அடிக்கடி நிலவி வரும் வாகன போக்குவரத்தினை சீரமைக்கும் வகையில் ஒரு வழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பினை பெரும்பாலான இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றாத காரணத்தினால் இந்த பகுதிகளில் தொடர்ந்து வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக சில பகுதிகளில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே, போக்குவரத்து போலீசார்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த ஒன்வே நடைமுறை திட்டத்தை அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : motorists ,roadway ,city ,Karur ,
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்