அரவக்குறிச்சி நவ, 28: தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு அரவக்குறிச்சி கிளை நூலகம் சார்பாக வட்டார பள்ளி மாணவ மாணவியருக்கு இளம் படைப்பாளர்கள் விருது 2019 க்கான பேச்சு கட்டுரை கவிதை போட்டிகள் அரவக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்றது.மாணவ மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தி உற்சாகப் படுத்துவதற்காக அரசு ஆண்டு தோறும் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு இளம் படைப்பாளர் விருது வழங்குகின்றது.இந்த ஆண்டு இளம் படைப்பாளர்கள் விருது 2019 க்காக வட்டார அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் அரவக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில் . செந்தில்குமார் மூன்றாம் நிலை நூலகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் அரவக்குறிச்சி வட்டார அளவில் 39 பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.