×

திருக்கழுக்குன்றம் அடுத்த மணமை கிராமத்தில் ஏரிக்கரை ஆக்கிரமிப்பில் அதிகாரிகள் உடந்தை

காஞ்சிபுரம், நவ.28: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த மணமை கிராமத்தில் நீர்வரத்துக் கால்வாய் அருகில் உள்ள ஏரிக்கரையை தனியாருக்கு தாரை வார்த்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள், கலெக்டர் பொன்னையாவிடம் புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் மணமை கிராமத்தில் ஏரி நீர்வரத்து கால்வாய் ஒட்டி,  8அடி அகலம் உள்ள பெரிய ஏரிக்கரையை, சென்னையைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் தாரை வார்த்து விட்டார்கள்.

இந்த ஏரிக்கரை ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டது. இந்த ஏரிக்கரைக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர், அதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்து, கடந்த நவம்பர் 18ம் தேதி ஏரிக்கரையை எடுத்துவிட்டார்.இதனால் பெரியளவில் மழை பெய்தால், ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரயி நடவடிக்கை எடுத்து அரசு இடத்தை மீட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : bride village ,Tirukkuralundram ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...