×

கோட்டூர் அருகே நடந்தது திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

திருத்துறைப்பூண்டி, நவ.28: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு பல்வேறு ஊர்களுக்கு சென்றுவரபொது மக்கள், மாணவர்கள் , அரசு ஊழியர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நிற்க முடியாத அளவுக்கு ஆக்கிரப்பு உள்ளது. கோடை காலத்திலும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நிற்க முடியாமல் வெளியில் வெயிலில் தான் நிற்கும் அவலநிலை இருந்து வருகிறது. இதேபோல் மழை காலத்திலும் நீடிக்கிறது. தற்போது அடிக்கடி மழை பெய்கிறது. மழையின்போது பொதுமக்கள் பேருந்து நிலையத்தின் இரண்டு பக்கமும் ஆக்கிரப்புகளால் நிற்க முடியமால் மழையில் நனைந்துகொண்டு தான் நிற்கிறார்கள். எனவே பொது மக்கள்நலன் கருதி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : passengers ,Thirupuraipoondi ,bus terminal ,Kottoor ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...