×

நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருத்துறைப்பூண்டி நவ.28:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கடியச்சேரி கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு டெங்கு நோய்பரவாமல் இருப்பதற்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குடித்து பயனடைந்தனர். நிகழ்வில் மாவட்டதலைவர் முகம்மது மிஸ்கீன் தலைமை வகித்தார்.மாவட்டமாணவரணி செயலாளர் காஜா மைதீன், கிளை தலைவர் அப்துல் காதர், மற்றும் உறுப்பினர்கள் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்