திருவாரூர், நவ.28: திருவாரூரில் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. அதன்படி இந்த பயிற்சி வகுப்பு இன்று ( 28ம் தேதி)மாலை 3.30 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. இதில் பயிற்சியின்போது இலவசமாக பாட குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் திருவாரூர் விளமலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.