×

தூத்துக்குடியில் தேங்கிநின்ற மழை நீரில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலி

தூத்துக்குடி,நவ.28:தூத்துக்குடியில் தேங்கி நின்ற மழை நீரில் வழுக்கி விழுந்த மூதாட்டி பலியானார்.தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள மாதாநகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கருப்பாயி(73). இவர் தனது பேரனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம்தேதி அங்குள்ள ஒரு சர்ச்சில் இருந்துள்ளார். அப்போது அங்கிருந்து வெளியே செல்ல முயன்றார். அப்பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் மற்றும் சகதியில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து கிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு இறந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Muthootty ,Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...