×

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம் எஸ்.ஐ, ஆட்டோ டிரைவர் மோதல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: கோடம்பாக்கத்தில் போலீஸ் எஸ்.ஐ, ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜான். நேற்று இரவு தனது சொந்த காரில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கோடம்பாக்கம் மெயின் ரோட்டில் சென்றபோது ஆட்டோ ஒன்று அவரது காருக்கு வழிவிடாமல் சென்றுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த எஸ்.ஐ ஆட்டோ டிரைவரை வழிமறித்து வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து எஸ்.ஐ கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் நந்தகோபாலை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Auto Driver Showdown ,
× RELATED காருக்கு வழிவிடாததால் ஆத்திரம் எஸ்.ஐ,...