×

ஆசீர்வாதம் செய்வது போல் நடித்து பெண் நடன கலைஞரிடம் 47 ஆயிரம் பணம் பறிப்பு: 3 திருநங்கைகளுக்கு வலை

சென்னை: சென்னை வடபழனி அழகிரி நகர் முதன்மை சாலையை சேர்ந்தவர் பரிமளா ராமு (27). நடன கலைஞர். இவர், ேநற்று முன்தினம் 47 ஆயிரம் பணத்தை அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் செலுத்தும் இயந்திரத்தில் பணம் செலுத்த வந்தார். அப்போது இயந்திரம் சரியாக வேலை செய்யாததால் வேறு ஏடிஎம் மையத்திற்கு செல்வதற்காக  சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 திருநங்கைகள் பரிமளா ராமுவிடம் வந்து ஆசீர்வாதம் செய்வது போல் நடித்துள்ளனர். பின்னர் 3 பேரும் சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பரிமளா ராமு 100 பணத்தை அவர்களிடம் கொடுத்து பேசி கொண்டிருந்தார். பின்னர் திடீரென 3 திருநங்கைகளும் அங்கிருந்து சென்று விட்டனர். திருநங்கைகள் சென்ற சிறிது நேரத்தில் பரிமளா ராமு தனது கைப்பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 47 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரிமளா ராமு சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகிரி நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று பணத்துடன் மாயமான 3 திருநங்கைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...