×

கவுன்சிலருக்கு விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல்

திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல்லில் கவுன்சிலருக்கு போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல் நடந்தது. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினருக்கு போட்டியிட விருப்ப மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவினர் பலரும் அளித்தனர். இவர்களுக்கான நேர்காணல் திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில்குமார், நத்தம் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம், தலைமை செயற்குழு உறுப்பினர் காந்திராஜன், அவை தலைவர்கள் பஷீர்அகமது, மோகன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, ராஜாமணி ஆகியோர் நேர்காணலில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,councilor ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி