×

ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரியத்தில் கேங்க்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு

நாமக்கல், நவ.27: மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 2ம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில், கேங்க்மேன் பணிக்கான தேர்வு நடக்கவுள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் 2,172 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு, வரும் 2ம்தேதி முதல், 13ம் தேதி வரை, ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், இமெயிலில் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலுடன், குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில், கலந்து கொள்ள வேண்டும். தேர்வில் கலந்து கொள்பவர்கள், புகைப்பட அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுத்தாள், மதிப்பெண் பட்டியல், 5 8 மற்றும் 10ம் வகுப்பு இதில் ஏதாவது ஒன்று. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றிதழையும் கொண்டு வந்து, உடற்தகுதி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Office ,Rasipuram Operator ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...