×

குழந்தையை பிரித்ததால் இளம்பெண் தற்கொலை

ராசிபுரம், நவ.27: ராசிபுரம் அருகே தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சத்யா (19). இவர்களுக்கு திருமணாகி சர்வேஸ் 11 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குழந்தை சர்வேசை எடுத்துக்கொண்டு தனது தந்தை தளமுத்துவிடம் கொடுத்து விட்டு மணிகண்டன் வெளியே சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த சத்யா, நள்ளிரவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் விரைந்து வந்த ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால், ஆர்டிஓ விசாரித்து வருகிறார்.

Tags : suicide ,separation ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை