×

விபத்தில் வாலிபர் பலி கார் டிரைவருக்கு ஓராண்டு சிறை

திருச்சி, நவ. 27: மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(38), கார் டிரைவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி பூனாம்பாளைத்தில் சாலையோரம் நின்று நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி சென்ற கார் சாலையோரம் நின்றிருந்த கோவிந்தன் மீது மோதியது. இதில் சம்பவயிடத்திலேயே கோவிந்தன் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் துறையூர் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன்(35) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திருச்சி ஜேஎம் 3 நீதிமன்றத்தி–்ல் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் அளித்த தீர்ப்பில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் பிரபாகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Car driver ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...