×

ரோவர் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பெரம்பலூர், நவ.27: பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் கடந்த 23ம்தேதி அன்று முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பாலாஜி துவக்கவுரை ஆற்றினார். ரோவர் உயர்கல்வி நிறுவனங்களின் இயக்குநர் பாலமுருகன் பேசினார். ரோவர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரி முதல்வர்ஆனந்த் வாழ்த்திப் பேசினார்.
விழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக கணினித்துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். விழாவின் முடிவில் அமைப்பியல் துறையின் பேராசிரியர் அருண்வரதராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி துணைமுதல்வர் பெரியசாமி மற்றும் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : alumni ,Rover Engineering College ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...