×

ஆசாத் சாலையில் மூடி கிடக்கும் நேதாஜி சிலை மீண்டும் திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர், நவ. 27: கரூர் ஆசாத் சாலையில் உள்ள நேதாஜி சிலை பகுதியை சீரமைத்து திறப்பு விழா காண தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் ஆசாத் சாலை மற்றும் ஜவஹர் பஜார் சாலைகள் சந்திக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி சிலை அமைக்கப்பட்டு சிறிய அளவிலான தடுப்பு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தடுப்புச் சுவர்கள் உடைந்து, மோசமான நிலையில் இருந்தது குறித்து அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நேதாஜி சிலை வளாக பகுதியை சீரமைக்கும் வகையில் பள்ளம் தோண்டி, சிலையும் மூடப்பட்டுள்ளது. இந்த பணி ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்ததாகவும் ஒரு மாதமாக எந்தவித பணியும் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு சுபாஸ் சந்திர போசின் சிலை வளாகத்தை புதுப்பித்து திறப்பு விழா காண தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் முக்கியமானவராக கூறப்படும் நேதாஜியின் சிலை வளாக பகுதியை விரைந்து தூய்மைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : activists ,reopening ,Netaji ,Azad Road ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...