×

தோகைமலை பில்லூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி சேலம் தம்மம்பட்டி அணிக்கு முதல் பரிசு.

தோகைமலை, நவ. 27: தோகைமலை அருகே பில்லூரில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சேலம் தம்மம்பட்டி அணி முதல் பரிசை பெற்றது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பில்லூர் ஊராட்சி பில்லூரில் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் 60ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. பில்லூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்த இப்போட்டியில் கோயம்புத்தூர், சென்னை, தஞ்சாவூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 66 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் நினைவு கோப்பையை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி லக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவினரும், 2வது பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் நினைவு கோப்பையினை திருச்சி மாவட்டம் பாளையநல்லூர் பாசப்பறவை கபடிக்குழுவும், 3வது பரிசினை ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் நினைவு கோப்பையினை திருச்சி மாவட்ட தமிழ்நாடு போலீஸ் கபடி குழுவும், இதேபோல் 4வது பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கபணத்துடன் நினைவு கோப்பையினை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பஞ்சாபிகேசன் கபடி குழுவும் பெற்றது. மேலும் சிறந்த அணிகளுக்கான பரிசு, சிறந்த கோச்சர், ரைடர் என சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் உள்பட விழா கமிட்டியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : team ,Salem Dhammampatti ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...