×

அம்மன் கோயிலில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பூந்தமல்லி, நவ. 27: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் வெற்றிலை தோட்டம், செல்வ கணபதி நகரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. கருப்பசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் கருப்பசாமி. நேற்று காலை மீண்டும் கோயில் நடையை திறக்க அவர் வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தார். உடனே பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ேபாலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்று, 3 அடி உயரமுடைய உண்டியல் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags : Jewel ,Amman Temple ,
× RELATED பாலக்காடு பகவதி அம்மன் கோயில் பூரம் திருவிழா