×

இலுப்பூரில் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இலுப்பூர், நவ. 27: இலுப்பூரில் அன்னவாசல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் குடிமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு குடி மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இலுப்பூர் கடைவீதியில் நடைபெற்ற இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு அன்னவாசல் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா சுப்பையா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோசி, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கருப்பையா ஆகியோர் உரையாற்றினர். கிளிக்குடி ஊராட்சி கூடலூர், தளிஞ்சி.பரம்பூர், இலுப்பூர், சாலைப்பட்டி. அன்னவாசல், திருநல்லூர் உள்ளிட்ட பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு இடமும் குடிமனைப்பட்டாவும் வழங்க வேண்டும்.60 வயது முதிர்ந்தவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Mass Communist Party ,Iluppur ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்