×

ஆலங்குளத்தில் மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

ஆலங்குளம், நவ. 27:  ஆலங்குளத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றபோது மாயமான மூதாட்டி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். ஆலங்குளம் நந்தவன கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் பத்திரகாளி (80). இவருக்கு சொரிமுத்து என்ற மகனும் பாப்பா என்ற மகளும் உள்ளனர். மகனுடன் வசித்து வந்த பத்திரகாளி, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது திடீரென மாயமானார். இதையடுத்து உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை.

 இந்நிலையில் அவர் ஆலங்குளம் காவல் நிலையம் கீழ்ப்புறம் உள்ள தொட்டியான்குளத்தில் நேற்று காலை சடலமாக மிதந்தார். இதையடுத்து விரைந்துசென்ற போலீசார் மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலை வேலு தலைமையிலான வீரர்கள் ஜெயரதினக்குமார், காளிமுத்து திருமலைக்குமார்,ரமேஷ் உள்ளிட்டோர் குளத்தில் மிதந்த மூதாட்டி பத்திரகாளி உடலை மக்கள் உதவியுடன் மீட்டனர். இதையடுத்து உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Recovery ,ancestor ,Alangulam ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...