×

நெல்லை அருகே வாகனம் மோதி 5 மாடுகள் பலி

மானூர், நவ. 27:     நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் வேம்பு கோனார் மகன் சுந்தர்ராஜ் (36). இவர் வழக்கம்போல் நேற்று காலை 20 எருமைகளுடன் சேதுராயன்புதூர் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றார். மாலை 6 மணியளவில் மாடுகள் கூட்டாக சேதுராயன்புதூர் பகுதியில் தனியார் கிட்டங்கி அருகே சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம், மாடுகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் 5 மாடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் 2 மாடுகள் படுகாயமடைந்தன. தகவலறிந்து விரைந்து சென்ற மானூர் போலீசார், காயமடைந்த மாடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : paddy field ,
× RELATED தென்காசி - நெல்லைக்கு அரசு ஊழியர்கள்...