நாங்குநேரி, நவ. 27: நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிளை நூலகம் சார்பில் 52வது தேசிய நூலக வார விழா நடந்தது. தலைமையாசிரியர் மார்க்ரெட் ஜான்சிராணி தலைமை வகித்தார். நாங்குநேரி நூலகர் ராமராஜ், ஆசிரியை ஜெபசிந்தி முன்னிலை வகித்தனர். கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் கணபதி, நாங்குநேரி டவுன் பஞ். செயல் அலுவலர் அரசப்பன் உள்ளிட்டோர் இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினர். நூலகர் சதீஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாங்குநேரி நூலகப் பணியாளர்கள் ராஜன், நாராயணன் செய்திருந்தனர்.