×

திருக்கோவிலூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் பழுது நீக்கம்

திருக்கோவிலூர்,  நவ. 27: திருக்கோவிலூரில் தெண்பெண்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம்   கடந்த 30 வருடத்திற்கு முன் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை  திருக்கோவிலூர், மணம்பூண்டி, அரகண்டநல்லூர், கீழையூர் உள்ளிட்ட  ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளை  இணைக்கும் சாலையில் மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த  மேம்பாலத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில்   சோலார் மின் விளக்கு பொருத்தப்பட்டு இருந்ததால் தினந்தோறும் அதிகாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த  ஆறு மாதமாக  மேம்பால மின் விளக்கு பழுதானதால்  அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிராலியாக மேம்பாலத்தில் மின் விளக்குகளை சரிசெய்யும் பணி நேற்று நடந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பொதுமக்கள், அதிகாரிகளை பாராட்டினர்.

Tags : Tirukovilur Bridge ,
× RELATED அரகண்டநல்லூர் – திருக்கோவிலூரை...