×

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதையொட்டி தீபத்திருவிழாவிற்கு சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நகர் பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றும் பணியில் வருவாய் துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை பெரிய தெரு, பேகோபுரம் தெரு, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சாலையோர ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.மேலும், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு எந்தவிமான இடையூறுகளும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...