×

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் பள்ளி, கல்லூரிகளில் விற்பனையாகும் உணவு பண்டங்களுக்கும் தரக்கட்டுப்பாடு

வேலூர், நவ.26:பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்களுக்கும் உணது தரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டில் அனைவருக்கும் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உணவகங்கள், உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதேபோல் கோயில்களில் விற்கப்படும் பிரசாதங்களும் தரநிர்ணய கட்டுப்பாட்டு ஆணையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை குழுக்களை அமைத்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவையும் உணவு தரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மக்களுக்கு தரமான உணவு பொருட்கள், சுகாதாரமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் என உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் மட்டுமின்றி கோயில் பிரசாதம், கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், குடிநீர் என அனைத்தையும் பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பண்டங்களின் தரமும் பரிசோதிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பண்டங்கள் குறித்தும் பரிசோதிக்கப்படுகிறது. அதோடு பாஸ்ட்புட் எனப்படும் துரித உணவு வகைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அரசு அலுவலகம் முதல் தனியார் அலுவலகம் வரை ஒரு நாளைக்கு ஐந்து இடங்களில் சோதனை நடத்தவும் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Schools ,Colleges ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...