×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை முத்துப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்கள் அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு

முத்துப்பேட்டை, நவ.27: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நவம்பர் 26ம்தேதி இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு அம்பேத்கரின் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இதில் பேசிய ஆசிரியர்கள் இந்திய அரசியலமைப்புநாள் நவம்பர் 26ம் நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : action Students ,Government School ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை