தஞ்சை நவ. 27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தஞ்சை மாநகரம், தஞ்சை, பூதலூர், அம்மாபேட்டை, திருவையாறு இடைக்குழுக்களின் கிளை செயலாளர்கள் மற்றும் இடைநிலைக்குழு உறுப்பினர்களுக்கான 2 நாள் தொடர் பயிற்சி முகாம் தஞ்சையி–்ல் நேற்று தொடங்கியது.மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பயிற்சி முகாமை மாவட்ட செயலாளர் பாரதி துவக்கி வைத்து தற்போதைய அரசியல் நிலைகள் குறித்து உரையாற்றினார். “மார்க்சியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மோகனும், “கட்சி வரலாறு மற்றும் திட்டம்” குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் திண்டுக்கல் சந்தானமும் வகுப்பு எடுத்தனர்.