பாபநாசம், நவ. 27: வங்காரம்பேட்டை வழிநடப்பில் வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் வங்காரம்பேட்டையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். வங்காரம்பேட்டை வழிநடப்பில் உள்ள சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மின்கம்பத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதனால் மின்கம்பம் வளைந்து எப்போதும் விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.