×

பைக் திருட்டு திருக்காட்டுப்பள்ளி,

நவ. 27: கல்லணை அருகே பாதிரக்குடி தைக்கால்காரதெரு குமார் மனைவி லதா (36). இவர் கடந்த 23ம் தேதி தனது சொந்த வேலையாக பைக்கில் தன் மகன் சுரேஷூடன் தஞ்சைக்கு சென்றார். பின்னர் தஞ்சையில் இருந்து திரும்பி வரும்போது சித்திரகுடி பஸ்ஸ்டாப் அருகே மழை பெய்தது. இதனால் பைக்கை நிறுத்தி விட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் லதா நேற்று முன்தினம் புகார் செய்தார். பூதலூர் போலீசார் வழக்குப்பதிந்து பைக்கை தேடி வருகின்றனர்.

Tags : Bike Theft School ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா