தஞ்சை, நவ. 27: தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.போட்டிகளை கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்ட தட்டு எறிதல் ஆகிய போட்டிகளில் 700 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் முதல் இடத்தை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்கத்துக்கு மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.