×

தஞ்சையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சை, நவ. 27: தஞ்சை நகர் பொதுமக்கள் நலன்கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர் நீதிமன்ற சாலையில் இன்று நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் சங்கரன் தலைமை வகிக்கிறார். எனவே தஞ்சை நகர கோட்டத்துக்கு உட்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழவீதி, கரந்தை, பள்ளியக்ரகாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.கும்பகோணம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜா், சில்வா் டங் சீனிவாச சாஸ்திரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் படித்து இந்தியா மட்டுமில்லாமல் உலகளவில் பெயரை பெற்றுள்ளனர்.


Tags : Electricity Consumers ,Meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்